சென்னை சாஸ்திரி பவன் முற்றுகையில் ஈடுபட்ட செல்வபெருந்தகை உட்பட 214 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கையை கண்டித்து நேற்று முற்றுகை நடைபெற்றது. நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முற்றுகையில் ஈடுபட முயன்ற ரூபி மனோகரன், தங்கபாலு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் 214 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.