திருவள்ளூர் ஆலை அம்மோனியா வாயுக் கசிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த பெண் உயிரிழந்ததையடுத்து இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அம்மோனியா வாயுக் கசிவில் இறந்த 14 பேருமே பெண்கள்; அதில் இருவருக்கு 15 வயது.
மேலும் 13 பேர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்; அவர்களின் உடல்நிலையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.



