டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்த வழக்கில் ஏப்.23ல் ஐகோர்ட் தீர்ப்பு வழங்குகிறது. சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6 முதல் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் வழக்கு தொடர்ந்துள்ளார்.