காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், பாகிஸ்தான் துாதரகம் இன்று கேக் ஆர்டர் செய்து வரவழைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பாக பதற்றம் நிலவுகிறது. பஹல்காம் தாக்குதலை, தூதரக ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடியதாக தகவல் வெளியான நிலையில், அங்கு செய்தியாளர்களும் குவிந்துள்ளனர். ஒரு தரப்பினர் தூதரகத்துக்குள் நுழைய முயன்றதுடன், ‘பாகிஸ்தான் ஒழிக’ என்று கோஷமிட்டும் வருகின்றனர். இதனால், பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள போலீஸார், தடுப்புகள் அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.