மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சாந்தங்குடி கிராமத்தில் ஒரு கொட்டகையில் காதலன், காதலி இருவரும் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஆணவக் கொலையாக இருக்குமோ என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



