Friday, March 14, 2025
Google search engine
HomeNewsDravidian Stockதிமுக ஆட்சியில் மீனவர் நலன்

திமுக ஆட்சியில் மீனவர் நலன்

திமுக ஆட்சியில் மீனவர் நலன்மீனவர்களின் நலனுக்காக வேறு எந்த ஆட்சியிலும் செயல்படுத்தப்படாத எண்ணற்ற திட்டங்கள் திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டுள்ளன.
1) மீன்வளர்ச்சிக் கழகம் அமைத்தது, மீனவர் நல வாரியம் அமைத்து ரூ. 4.52 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கியது

2) விபத்து மரண இழப்பீட்டுத் தொகையை ரூ. ஒரு லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தியது
3) கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் அறிவித்தது

4) மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு உதவித் தொகை வழங்கியது உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டுள்ளன.

5)காணாமல்போன மீனவர்களின் குடும்பத்துக்கு தினசரி உதவித் தொகை வழங்கும் திட்டம்

6) மீன்பிடி படகுகளுக்கு டீசல் மானியம் அறிவித்தது

7) மீனவர்களுக்கு இலவச வீடுகள் கட்டும் திட்டம் அறிவித்தது

8) சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் ரூ. 80 கோடி கடனை தள்ளுபடி செய்தது

9)சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என்ற அறிவிப்பு மட்டும்தான் அதிமுக ஆட்சியில் வெளியானது. ஆனால், அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த திமுகதான் சுமார் 30 ஆயிரம் சுனாமி வீடுகள் கட்டும் பணியை நிறைவேற்றியது.

10) சுனாமியால் பாதிக்கப்பட்ட படகுகளை சீரமைக்கத் திட்டம் அறிவித்ததும் திமுக ஆட்சியில்தான்.

11)மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கும் திட்டம் திமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு, பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு கோபுரங்களைப் பயன்படுத்த ஒப்பந்தம் செய்யும் முயற்சிகள் நடைபெற்றன. அந்த நேரத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பின்னர், ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, தொலைத்தொடர்பு கோபுரப் பயன்பாட்டுக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளாமல், வாக்கி டாக்கிகளை கொள்முதல் செய்து, ஊழல் செய்துள்ளது. இதன் காரணமாகத்தான் மீனவர்களுக்கான வாக்கி டாக்கி பயன்பாடு இதுவரை முழுமை பெறாமல் உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் எண்ணற்ற அறிவிப்புகள் வெளியாகின. அதில், பல அறிவிப்புகள் வெற்று அறிவிப்புகளாகவே உள்ளன. அதே நிலை தான் தற்போதைய அதிமுக ஆட்சியிலும் தொடர்கிறது.

தேர்தல் வாக்குறுதியிலும், சட்டப் பேரவையிலும் வெளியிடப்பட்ட அனைத்து அறிவிப்புகளுக்கும் செயல்வடிவம் அளித்ததும், சொன்னதைச் செய்ததுடன், சொல்லாததையும் செய்தது திமுக அரசு மட்டும்தான்.

By Thiru M.K. Stalin திமுக செயல்தலைவர்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments