சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எழுத்துப்பிழைகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதி சான்றிதழ்களில் சாதிப் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஒரே மாதிரி இருக்க உத்தரவு பிறப்பிக்கப்ப்பட்டுள்ளது. இசை வேளாளர் சாதி சான்றிதழ் வழங்கும்போது இசை வெள்ளாளர் என குறிப்பிடப்படுவதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.