மாஞ்சோலையில் இருந்த குடும்பங்களுக்கு
இழப்பீடு, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட மறுவாழ்வு திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை – அகஸ்தியர் மலைப்பகுதியில் ஒன்றிய குழு ஆய்வு நடத்தி எஞ்சியுள்ள குடும்பங்களை அப்புறப்படுத்த வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.