2 நாள் அரசு முறைப்பயணமாக சவுதி அரேபியா சென்ற பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பினார். சவுதி பட்டத்து இளவரசரை சந்தித்தபின் அவர் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்வதுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார். ஆனால் காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து எழுந்த பதற்ற சூழலால் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.