புழக்கத்தில் உள்ள புது வகை ரூ.500 கள்ள நோட்டு குறித்து எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தரம், அச்சில் அசல் ரூ.500 நோட்டிற்கு கொஞ்சமும் குறையாமல் உள்ள கள்ள நோட்டில் ஒரு எழுத்து மாறி இருக்கும் என்றும், RESERVE BANK OF INDIA என்ற வார்த்தையில் E-க்கு பதில் A இருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளது. இந்த கள்ளநோட்டுகள் ஏற்கனவே சந்தையில் புழக்கத்திற்கு வந்து விட்டதாகவும், வங்கிகள், செபி, சிபிஐ, என்ஐஏ உள்ளிட்ட அமைப்புகள் விழிப்புடன் கண்காணிக்கவும் அறிவுறுத்தி உள்ளது.