கட்டுமானப் பணிகளுக்கான எம்சாண்ட் மற்றும் ஜல்லி போன்றவற்றின் விலை இன்று முதல் உயர்கிறது. தமிழ்நாடு கல் குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்கள் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒரு யூனிட் ஜல்லி ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், எம் சாண்ட் ரூ.6 ஆயிரமாகவும், பி சாண்ட் ரூ.7 ஆயிரமாகவும் விலை உயரும் என்கின்றனர்.