அரசு ஊழியர்கள் நலனில் முதலமைச்சர் அக்கரையோடு உள்ளார். அரசு ஊழியர்களின் நலன் தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டு உள்ளோம். பழைய ஓய்வூதியம் தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சரிடம் பேசி உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என பழைய ஓய்வூதிய திட்ட அமல்படுத்துவது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கேள்விக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.