சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை நாளை (ஜூன் 28) தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார். சென்னை பாலவாக்கம் ஆதி திராவிடர் அரசுப் பள்ளியில் நடைபெறும் இந்த நிகழ்வில் முதல்வர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமைத் துவக்கி வைப்பார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல் மருந்து வழங்க அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
