முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தவெக நகரச்செயலாளர் செல்வம் அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கு அரசியல் நோக்கில் தொடுக்கப்பட்டது என்று கூறி அனிதா ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார்.