அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.23 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்ட விவகாரத்தில், தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் அவரது உதவியாளர் என்று கூறப்படும் இளஞ்செழியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இன்று சென்னையில் காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜரானார். வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரில் விசாரணை தொடர்கிறது.