திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் இன்று முதல் செல்போன் கொண்டு செல்வது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்பவர்களிடம் இருந்து அது பறிமுதல் செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருச்செந்தூருக்கு வருகை தரும் பக்தர்கள் இதனை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.



