Monday, June 29, 2026
HomeLifestyleஎக்ஸாம் பயம் போக்க 5 எளிய வழிகள்

எக்ஸாம் பயம் போக்க 5 எளிய வழிகள்

தேர்வு (Exam) என்றாலே பல மாணவர்களுக்கு கை கால் நடுங்க ஆரம்பித்துவிடும். நன்றாக படித்திருந்தாலும், எக்ஸாம் ஹாலுக்குள் நுழைந்தவுடன் பயத்தில் எல்லாம் மறந்துபோகும் நிலை பலருக்கும் நடக்கும். இந்த தேர்வு பயத்தை (Exam Phobia) எளிதாக எப்படி கடப்பது என பார்ப்போம்.

  • 1. கடைசி நேர பரபரப்பை தவிருங்கள்**

எக்ஸாம் ஹாலுக்குள் செல்வதற்கு ஐந்து நிமிடம் முன்பு வரை புத்தகத்தை வைத்துக்கொண்டு மனப்பாடம் செய்வதை முதலில் நிறுத்துங்கள். இது உங்கள் பதற்றத்தை மட்டுமே அதிகரிக்கும். தேர்வுக்கு அரை மணி நேரத்திற்கு முன்பே புத்தகத்தை மூடி வைத்துவிட்டு ரிலாக்ஸ் ஆக இருங்கள்.

  • 2. நண்பர்களிடம் விவாதிக்க வேண்டாம்**

“நீ அந்த கேள்வியை படிச்சியா? நான் அதை படிக்கவே இல்லையே!” என நண்பர்களிடம் கடைசி நேரத்தில் கேட்பது தேவையற்ற பயத்தை உருவாக்கும். நீங்கள் படித்தது மட்டுமே தேர்வுக்கு வரும் என்ற பாசிட்டிவ் எண்ணத்தோடு இருங்கள்.

  • 3. மூச்சுப் பயிற்சி (Deep Breathing)**

கேள்வித்தாள் கைக்கு வந்தவுடன், உடனே அவசரமாக எழுத ஆரம்பிக்க வேண்டாம். கண்களை மூடி, 3 முறை ஆழமாக மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள். இது உங்கள் மூளைக்குத் தேவையான ஆக்சிஜனை கொடுத்து, பதற்றத்தை உடனடியாக குறைக்கும்.

  • 4. தெரிந்த கேள்விகளுக்கு முன்னுரிமை**

முதலில் வினாத்தாளை முழுமையாக ஒருமுறை படியுங்கள். உங்களுக்கு மிகவும் நன்றாகத் தெரிந்த பதில்களை முதலில் எழுதத் தொடங்குங்கள். இது உங்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கையை (Confidence) கொடுக்கும்.

  • 5. போதுமான தூக்கம் அவசியம்**

தேர்வுக்கு முந்தைய நாள் இரவு முழுவதும் கண் விழித்து படிப்பது மிகப்பெரிய தவறு. மூளை தளர்வாக இருந்தால் மட்டுமே படித்த விஷயங்களை சரியான நேரத்தில் நியாபகப்படுத்த முடியும். குறைந்தபட்சம் 7 மணி நேர தூக்கம் கட்டாயம் தேவை.

RELATED ARTICLES

பசுவதை ?

Most Popular

Cinima World