உங்களுக்குத் தெரியாத ஒரு லிங்கை க்ளிக் செய்ததாலோ, அல்லது போலியான கஸ்டமர் கேர் நம்பருக்கு OTP-ஐ சொன்னதாலோ உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பல ஆயிரம் ரூபாய் திருடப்பட்டுவிட்டதா?
உங்களுக்குத் தெரியாத ஒரு லிங்கை க்ளிக் செய்ததாலோ, அல்லது போலியான கஸ்டமர் கேர் நம்பருக்கு OTP-ஐ சொன்னதாலோ உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பல ஆயிரம் ரூபாய் திருடப்பட்டுவிட்டதா?
1. உடனே 1930 என்ற எண்ணுக்கு அழையுங்கள்
பணம் திருடப்பட்டவுடன் எந்த நேரமாக இருந்தாலும் உடனடியாக 1930 என்ற தேசிய சைபர் கிரைம் உதவி எண்ணிற்கு (National Cyber Crime Helpline) போன் செய்யுங்கள்.
2. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகார் அளியுங்கள்
cybercrime.gov.in என்ற இந்திய அரசாங்கத்தின் இணையதளத்திற்குச் செல்லுங்கள். ‘Report Cyber Crime’ என்பதைத் தேர்ந்தெடுத்து, நடந்த முழு விவரங்களையும் பதிவு செய்யுங்கள்.
3. கார்டை பிளாக் செய்யுங்கள் (Card Block)
உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ கஸ்டமர் கேருக்கு அழைத்து உங்கள் ATM கார்டு மற்றும் UPI சேவைகளை உடனடியாக தற்காலிகமாக பிளாக் செய்யுங்கள்.



