ஜாதி பெயரைக் கூறி திட்டி காவல்துறையினர் தாக்கியதால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் வேல்முருகன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார். நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் காவல்துறையின் சாதியக் கொடுமை குறித்த கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.