தமிழகத்தின் 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவது தொடர்பாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த டெண்டரை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.
முந்தைய ஆட்சிக் காலத்தில், தூய்மைப் பணிகளை தனியார் பங்களிப்புடன் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிக்கும் நோக்கில் இந்த டெண்டர் வெளியிடப்பட்டிருந்தது.
தற்போது அந்த டெண்டர் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.