பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய SRH VS MI போட்டியில் வீரர்கள், நடுவர்கள் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்கவுள்ளனர். போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும். இன்றைய போட்டியில் பட்டாசு பயன்படுத்தப்படாது. CHEER LEADERகள் பயன்படுத்தப்பட மாட்டார்கள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.