Home News தமிழகம்தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகம்தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

0
woman in white button up shirt and blue stethoscope

அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது குறித்து முடிவெடுக்க 2018ல் ஐகோர்ட் உத்தரவிட்டது. உத்தரவை அரசு நிறைவேற்றாததை அடுத்து செவிலியர்கள் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 2018ம் ஆண்டின் உயர்நீதிமன்ற உத்தரவை மூன்று மாதங்களில் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Exit mobile version