Home national-news காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிப்பு

காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிப்பு

0

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி காவல்துறையினருக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் எஸ்.பி. விவேகானந்தா சுக்லா, ராமநாதபுரம் எஸ்.பி. சந்தீஷ் உள்ளிட்ட 15 பேருக்கு இந்தப் பதக்கம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலை எதிர்த்துப் போராடுவதில் காவல்துறையினரின் பங்களிப்பை இந்த அங்கீகாரம் கௌரவிக்கிறது.

Exit mobile version