இந்தியா–செஷல்ஸ் இருதரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக செஷல்ஸ் நாட்டிற்குப் புறப்பட்டுள்ளார். இந்த பயணத்தின்போது செஷல்ஸ் தேசிய தினப் பொன்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். மேலும், கடல்சார் பாதுகாப்பு குறித்த முக்கிய ஆலோசனைகளும் இந்த சந்திப்பில் இடம்பெறும்.
