குழந்தைகளுக்குச் சளி, இருமல் வந்துவிட்டால் உடனே ஆன்டிபயாட்டிக் மருந்துகளைக் கொடுக்கப் பெற்றோர்கள் துடிப்பார்கள். ஆனால், லேசான சளிக்கு இயற்கை முறையிலேயே…
குழந்தைகளுக்குச் சளி, இருமல் வந்துவிட்டால் உடனே ஆன்டிபயாட்டிக் மருந்துகளைக் கொடுக்கப் பெற்றோர்கள் துடிப்பார்கள். ஆனால், லேசான சளிக்கு இயற்கை முறையிலேயே தீர்வு காண முடியும்.
1. தேன் மற்றும் இஞ்சி (Honey and Ginger) ஒரு ஸ்பூன் சுத்தமான தேனில், ஒரு துளி இஞ்சிச் சாறு கலந்து குழந்தைக்குக் கொடுங்கள். இது தொண்டையில் உள்ள கரகரப்பை உடனே குறைத்து, இருமலுக்கு நல்ல நிவாரணம் தரும். (எச்சரிக்கை: ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தேன் கொடுக்கக் கூடாது)
2. கற்பூரவள்ளி இலை (Ajwain/Mexican Mint) கற்பூரவள்ளி இலைகளைச் சுட்டு, அதன் சாற்றை எடுத்து அரை ஸ்பூன் குழந்தைக்குக் கொடுக்கலாம். இது நெஞ்சுச் சளியை நீக்கும் மிகச்சிறந்த மருந்து.
3. ஓமம் மற்றும் பூண்டு கஷாயம் ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு ஓமம், ஒரு பல் பூண்டு, மற்றும் தட்டிய சுக்கு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க வையுங்கள்.
4. தூபமிடுதல் (Fumigation) குழந்தை தூங்கும்போது, அறையில் துளசி மற்றும் கற்பூரம் போட்டுப் புகைய விடுங்கள். அந்த வாசனை மூச்சைச் சீராக்கி, சளியால் ஏற்படும் மூக்கடைப்பைக் குறைக்கும்.



