இன்று மொபைல் கேம்ஸ் என்பது குழந்தைகளை அடிமையாக்கும் ஒரு மிகப்பெரிய சங்கிலி. ஒருமுறை அந்த கேமிற்குப் பழகிவிட்டால், பிறகு அவர்கள்…
இன்று மொபைல் கேம்ஸ் என்பது குழந்தைகளை அடிமையாக்கும் ஒரு மிகப்பெரிய சங்கிலி. ஒருமுறை அந்த கேமிற்குப் பழகிவிட்டால், பிறகு அவர்கள் நிஜ உலகத்தில் எதிலுமே ஆர்வம் காட்டமாட்டார்கள்.
1. படிப்படியாகக் குறையுங்கள் (Slow weaning) “இனி கேம் விளையாடவே கூடாது” என்று ஒரே நாளில் மொபைலை பிடுங்கினால், குழந்தை பயங்கரமாக ரியாக்ட் செய்யும். முதலில் 3 மணி நேரம் என்றால், பிறகு 2 மணி நேரம், பின் 1 மணி நேரம் என படிப்படியாகக் குறையுங்கள்.
2. மொபைலுக்குப் பதில் மாற்று பொழுதுபோக்கு மாலையில் அவர்களை வெளியே அழைத்துச் சென்று ஓடி விளையாட விடுங்கள், நீச்சல், ஓவியம், அல்லது மியூசிக் கிளாஸ் எனப் பயனுள்ள வேலைகளில் அவர்களை பிஸியாக வைத்திருங்கள்.
3. பெற்றோர்களே முன்மாதிரியாக இருங்கள் குழந்தை விளையாடும்போது நீங்கள் உங்கள் மொபைலில் இன்ஸ்டாகிராம் பார்த்துக் கொண்டிருந்தால், அவர்கள் அதைத்தான் செய்வார்கள்.
4. ‘கேமிங் ரூம்’ வேண்டாம், ‘ஃபேமிலி ரூம்’ ஆக்குங்கள் பெட்ரூமில் மொபைல் கேம் விளையாட அனுமதிக்காதீர்கள். பொதுவான ஹாலில் மட்டுமே மொபைல் பயன்படுத்த வேண்டும் என்ற விதியைக் கொண்டு வாருங்கள்.



